உள்ளூர் செய்திகள்
கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
- சிலம்பரசன் இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அபினவம் காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி செல்வ குமாரி (28), இவருக்கும் அவரது கணவ ருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்க ளுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரி அங்கிருந்த விவசாய கிணற்றில் குதித்து விட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை காப்பாற்ற முயன்றனர்.
ஆனாலும் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது தாய் பரமேஸ்வரி ஏத்தாப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.