உள்ளூர் செய்திகள்

கர்நாடகா அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-17 14:59 IST   |   Update On 2023-08-17 14:59:00 IST
  • தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
  • இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

சேலம்:

தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

கூடுதல் தண்ணீர்

குறிப்பாக டெல்டா பாசன விவசாயிகள் மேட்டூர் அணையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

எனவே மேட்டூர் அணைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை விரைந்து வழங்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம், மரவள்ளி கிழங்குக்கு டன்னுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்திப் பட்டன.

Tags:    

Similar News