உள்ளூர் செய்திகள்

கைதான விஜயகுமார், அஜித்குமார்.

பெண் குரலில் பேசி ஏமாற்றி காவலாளியை தாக்கி செல்போன் பறித்த 3 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

Published On 2023-09-10 07:34 GMT   |   Update On 2023-09-10 07:34 GMT
  • வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
  • மர்ம நபர் ஒருவர் பெண் குரலில் பேசி, தான் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் இருப்ப தாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளார்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி சந்தைப் பேட்டை அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு சம்பவத்தன்று இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பெண் குரலில் பேசி, தான் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் இருப்ப தாகவும், தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளார்.

செல்போன் பறிப்பு

அதை உண்மை என நம்பிய அந்த வாலிபர் சம்பந்தப்பட்ட நபர் சொன்ன இடத்திற்கு சென்ற போது அங்கு இருளில் மறைந்திருந்த மேலும் 2 பேர் ஒன்று சேர்ந்து வாலிபரை கல்லால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த வெள்ளி நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்த வாலிபர் அவ்வழியாக வந்த வாகனத்தில் உதவி கேட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணை யில் வாலிபரை தாக்கி, அவரிடமிருந்து நகை மற்றும் செல்போனை பறித்து சென்றதும், எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (22), திருச்சி, காந்தி பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (21) மேலும் 17வயது சிறுவன் ஆகியோர் என்பதும் அவர்களில் 17 வயது சிறுவன் தான் வாலிபரை செல்போனில் பேசி வரவழைத்து நகை, செல்போனை பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News