உள்ளூர் செய்திகள்

பள்ளி விடுதியில் தங்கி இருந்த 3 மாணவர்கள் மாயம்

Published On 2023-11-15 09:27 GMT   |   Update On 2023-11-15 09:27 GMT
  • சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன்கள் கோகுல் (வயது 12), பிரசாந்த் (10). இவர்கள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி யில் 7 மற்றும் 5-ம் வகுப்பு தங்கி படித்து வந்தனர்.

இதே போல பெரிய கிணறு பகுதியை சேர்ந்த செந்தமிழ் குமரன். இவரது மகன் மயிலேஷ் (8). இவரும் அதே பள்ளியில் தங்கி 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 3 பேரும் பள்ளியில் இருந்து திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவர்க ளையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News