உள்ளூர் செய்திகள்

லாட்டரி விற்ற 2 பேர் கைது

Published On 2023-10-06 09:30 GMT   |   Update On 2023-10-06 09:30 GMT
  • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • குமார் என்கிற சக்திவேல் (37), கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்த பகுதியில் சோதனை நடத்திய போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட கோழிகட்டானூர் பகுதியை சேர்ந்த குமார் என்கிற சக்திவேல் (37), கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News