உள்ளூர் செய்திகள்

பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டிய காட்சி.

களக்காடு அருகே ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

Published On 2023-10-08 09:03 GMT   |   Update On 2023-10-08 09:03 GMT
  • வடக்கு மீனவன் குளத்தில் பயணிகள் நிழற்குடை பழுதடைந்த காரணமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
  • புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

நெல்லை:

களக்காடு ஊராட்சி ஒன்றியம் கள்ளி குளம் ஊராட்சி வடக்கு மீனவன் குளத்தில் அன்னை தெரேசா உயர்நிலை பள்ளி முன்பு இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்த காரணமாக இடித்து அப்புறப் படுத்தப்பட்டது.

அந்த இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தருமாறு அந்த பகுதி மக்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்க ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பா ளர் அழகிய நம்பி, மாவட்ட துணைத் தலைவர் செல்லப்பாண்டி, கள்ளிகுளம் ஊராட்சி மன்ற துணை தலைவி முத்து லெட்சுமி, களக்காடு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சைமன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன் காங்கிரஸ் நிர்வாகிகள் ராணி, ஸ்ரீதேவி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News