உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3¼ லட்சம் மோசடி-எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி புகார்

Published On 2023-03-29 14:46 IST   |   Update On 2023-03-29 14:46:00 IST
  • விசா வாங்க ரூ.3¼ லட்சம் செலவு ஆகும் என சுப்பிரமணியனிடம் அந்த வாலிபர் கூறியுள்ளார்.
  • மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் சுப்பிரமணியன் கூறியுள்ளார்

நெல்லை:

நெல்லை மாவட்டம் வீ.கே.புரம் ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50), தொழிலாளி.

இவர் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வெளிநாட்டில் வேலை

நான் குடும்பத்துடன் வீ.கே.புரத்தில் வசித்து வருகிறேன். எனது மூத்த மகன் ஸ்ரீவிஷ்ணு. இவர் டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வருகிறார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர், எனது மகன் வேலை தேடுவதை அறிந்து வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக என்னிடம் கூறினார். இதற்கு விசா வாங்க ரூ.3¼ லட்சம் செலவு ஆகும் என அவர் கூறினார். இதனை நம்பி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 4 தவணைகளில் ரூ.3¼ லட்சத்தை அவர் கூறிய 3 வங்கி கணக்குகளில் செலுத்தினேன். அதன் பின்னர் அவரிடம் போன் செய்த போது ஒரு சில நாட்களில் வேலை வாங்கி தருவதாக கூறி காலத்தை கடத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News