உள்ளூர் செய்திகள்

கோவையில் சூப்பர்வைசர் வீட்டில் கொள்ளை

Published On 2023-06-12 15:15 IST   |   Update On 2023-06-12 15:15:00 IST
  • கார்த்திகேயன் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
  • 1½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை,

கோவை மதுக்கரை அருகே உள்ள போடிபாளை யத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (43). இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி தனியார் கல்லூரியில் பேராசிரி யையாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான மதுரைக்கு சென்றனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், மோதிரம் உள்பட 1½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து கார்த்திகேயன் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News