தமிழ்நாடு செய்திகள்
தை பிறந்தால் வழிபிறக்கும்- ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
- ஓ.பன்னீர்செல்வம் எந்த அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- தயவு செய்து பொறுமையாக இருங்கள்.
அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகி வருகிறது. டி.டி.வி. தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அப்படியானால் ஓ.பன்னீர்செல்வம் எந்த அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:- ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். 'தை பிறந்தால் வழி பிறக்கும்.' அதுவரை தயவு செய்து பொறுமையாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.