தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளை
- 13 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.
- திருடு போன நகைகள் மதிப்பு ரூ. 1,70 லட்சம் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நல்லூர் ரோடு சித்தனபள்ளியை சேர்ந்தவர் ஜெபராஜ் லிவிங்க்ஸ்டன் (வயது 31). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 10-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பனிக்குலத்துக்கு சென்றுள்ளார். இவர்கள் வீடு பூட்டிகிடந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.
நேற்று ஊரில் இருந்து திரும்பிய ஜெபராஜ் லிவிங்க்ஸ்டன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருடு போனதை கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து ஹட்கோ போலீசில் ஜெபராஜ் லிவிங்க்ஸ்டன் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து கைரேகை பதிவு செய்து பழைய குற்றவாளிகள் யாராவது இந்த திருட்டில் ஈடுபட்டனரா என விசாரித்து வருகின்றனர்.
திருடு போன நகைகள் மதிப்பு ரூ. 1,70 லட்சம் என்று கூறப்படுகிறது.