உள்ளூர் செய்திகள்

சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

சாலை புதுப்பிக்கும் பணி

Published On 2022-11-17 09:47 GMT   |   Update On 2022-11-17 09:47 GMT
  • சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
  • சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருக்கருகாவூர் வழியாக சாலியமங்களம் வரையிலான நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டு, குழி பள்ளங்கள் உருவாகி இருந்தன அதனால் வாகன ஓட்டிகள் தினசரி சிரமப்பட்டு வந்தனர்.

நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதனை அடுத்து சாலியமங்களத்தில் இருந்து பாபநாசம் வரையிலான சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்றது இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை புதுப்பிக்கும் பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது

பாபநாசம் சாலியமங்களம் முக்கிய நெடுஞ்சாலையில் தினசரிநூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், இலகுரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன அதனால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்போது சாலையை விரிவாக்கம் செய்து அகலமாக சாலையை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதனால் இந்த சாலையை பயன்படுத்தகூடிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாலை புதுப்பிக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் குறையும் என நினைக்கிறோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News