உள்ளூர் செய்திகள்

கும்பகோணம்- தஞ்சை சாலையில் மறியல் நடந்தது.

காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2022-09-26 09:22 GMT   |   Update On 2022-09-26 09:22 GMT
  • தாராசுரம் பகுதியில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.
  • சாலை மறியலால் கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுவாமிமலை:

கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராசுரம் பகுதியில் உள்ள 31 முதல் 35 வது வார்டுகளில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக குடி தண்ணீர் சரி வர வழங்கப்படவில்லை

இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர் முறையாக குடிநீர் வழங்க வேண்டி பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் பத்ம குமரேசன் தலைமையில் கும்பகோணம்- தஞ்சை சாலையில் மறியலில் இன்று ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலில் மாநகராட்சி கவுன்சிலர் கௌசல்யா வாசு, அதிமுக நிர்வாகிகள் லெனின். கோவி. கேசவன், பொன்னையன், கோவி.ரமணன் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்

கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இந்த சாலை மறியலால் கும்பகோணம் தஞ்சாவூர் பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News