உள்ளூர் செய்திகள்
ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் செஸ் போட்டி
ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் செஸ் போட்டிநடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குகிறது. இதையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் வட்டார அளவிலாள செஸ் போட்டி ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.