ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மீன்பிடி வலைகள் அகற்றம்
- குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர்.
- தண்ணீர் தடைபட்டு தேங்கி செல்வதால் குறுவை வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுக்கா தலைஞாயிறு மல்லியனா ருமற்றும் பெரிய வாய்க்கால் பகுதியில் குறுவைசாகுபடி க்காக தண்ணீர் திறக்கப்பட்டு ள்ளது இந்த வாய்க்காலில் சிலர் வலைகளை கட்டி மீன்பிடித்து வருகின்றனர் இதனால் தண்ணீர் தடை பட்டுதேங்கிசெல்வ தால் குறுவை வயல்க ளுக்கு தண்ணீர்பாய்ச்சு வதில் சிரமம் ஏற்பட்டு ள்ளது இக்குறித்துபொது ப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் ஆற்றின் குறுக்கே உள்ள மீன்பிடி வலைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதனை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன உதவியாளர்கள் மற்றும் பொதுபணித்துறை பணியா ளர்கள் மல்லியனாறு மற்றும் பெரியவாய்காலில் தண்ணீர் செல்ல தடையாக ஜந்து இடங்களில் வைக்கபட்டிருந்த மீன்பிடி வலைகளை அகற்றினர் மீன்பிடி வலைகளில் அகற்றியதால் தண்ணீர் தற்போது குறுவை சாகுபடிக்கு வேகமாக செல்கின்றன இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.