உள்ளூர் செய்திகள்

கடலூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் பேனர்கள் அகற்றப்பட்ட காட்சி.

கடலூர் மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் இருந்த பேனர்கள் அகற்றம்

Published On 2023-03-19 08:36 GMT   |   Update On 2023-03-19 08:36 GMT
  • பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர்.
  • உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும்

கடலூர்:

பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அவ்வப் போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அதன் மூலம் உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூராகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்கள் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் தி.மு.க. தலைமை அறிவுறுத்தியதை தொடர்ந்து கடலூர் மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தி.மு.க.வினர் பேனர்களும் அதிரடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

Tags:    

Similar News