பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி
- வருவாய்துறை, தீயணைப்புதுறை மற்றும் அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு செயல் விளக்கமும், பயிற்சியும் அளித்தனர்.
- மழை, வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்படும் போது மக்கள் மற்றும் கால்நடைகளை காப்பது குறித்து செய்து காட்டினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பாலசமுத்திர குளத்தில் பேரிடர் காலங்களில் மனிதன், கால்நடைகளை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புதுறை, மின்சாரதுறை, கால்நடைதுறை, போக்குவரத்துதுறை போலீசார் வீட்டு அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு செயல் விளக்கமும், பயிற்சியும் அளித்தனர்.
பயிற்சியில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்படும் போது மக்கள் மற்றும் கால்நடைகளை காப்பது குறித்து செய்து காட்டினர். நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் இருவரும் பயிற்சியாளருடன் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டது மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை பெற்றது.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரவி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.