உள்ளூர் செய்திகள்

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-09-17 15:02 IST   |   Update On 2022-09-17 15:02:00 IST
  • தலைவலியால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் சவுமியா (வயது 22). பிளஸ் 2 படித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே ஒற்றைத் தலைவலால் அவதிப்பட்ட வந்த சவுமியா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் அதில் எந்த பலனும் இல்லாததால் அடிக்கடி தலைவலிப்பதாக பெற்றோரிடம் கூறிவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News