பட்டாசு வெடி விபத்தில் தொழிலாளி சாவு
- பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை :
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). பட்டாசு தொழிலாளி.
கடந்த 7-ந் தேதிதியன்று மாலை வாலாஜாவில் உள்ள பட்டாசு குடோனில் சுரேஷ் மற்றும் ராஜேந்திரன் (36)ஆகிய இருவரும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த னர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பொறி பட்டதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.
பட்டாசு குடோனின் சிமெண்ட் ஷீட் மேற்கூரையும், கொட்டகையும் எரிந்து சாம்பலானது.
இதில் சுரேஷ்க்கும், ராஜேந்திரனுக்கும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக சுரேசை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ராஜேந்திரனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.