காவேரிப்பாக்கம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
- திருமணமான 8 மாதத்தில் விபரீதம்
- அரக்கோணம் உதவி கலெக்டர் விசாரணை
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் அடுத்த பெரப்பேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 30). இவருக்கும், சோளிங்கரை அடுத்த சூரைமோட்டூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை-மகேஸ்வரி தம்பதியரின் மகள் வான்மதி (26) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டில் வான்மதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தக வல் அறிந்ததும் பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட வான்மதிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா விசாரணை நடத்தி வருகிறார்.