உள்ளூர் செய்திகள்

திரவுபதி அம்மன் திருக்கல்யாணம்

Published On 2023-06-24 13:27 IST   |   Update On 2023-06-24 13:27:00 IST
  • சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை யொட்டி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. திரவுபதி அம்மன், அர்ஜூனன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்கு பட்டாடை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News