தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
- இலவச தையல் எந்திரம் வழங்க மனுக்கள் பெறப்பட்டது
- நலத்திட்ட உதவிகளை அதிகாரி வழங்கினார்
அரக்கோணம்:
அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கோட்ட அளவிலான சிறப்பு மனு நீதி நாள் முகாம் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
மாற்று திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கோட்டாட்சியர் பாத்திமா கலந்து கொண்டு பேசுகையில் வீடு இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த சொத்துக்களும் இல்லாத நிலையில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, பட்டா இருந்தும் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுக்கப்படும் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு தையல் பயிற்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு மின் மோட்டார் பொருந்திய இலவச தையல் எந்திரம் வழங்க மனுக்கள் பெறப்பட்டது.
பின்னர் 3 சக்கர சைக்கிள், காதலிக்கருவி, ஊன்று கோல், மற்றும் சேர் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் பாத்திமா பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கந்திர் பாவை, போலியோ பிளஸ் சேர்மன் வெங்கடரமணன், தமிழ் படைப்பாளிகள் சங்கத் தலைவர் மோகன், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் பிரபாகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.