வாலாஜாவில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பில் உணர்வு திறன் பூங்கா
- நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்கள் பேசினர்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகரமன்ற கூட்டம் , நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் கமலரா கவன், ஆணையாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வாலாஜா நகரில் பல இடங்களில் ஆடு, மாடு, மீன் கடைகள் உள்ளது.அந்த இறைச்சி கடைகளில் கழிவுகளை அருகில் கழிவுநீர் கால்வாயில் கொட்டி வருகின்றனர்.
இதனால் கால்வாய்கள் நிரம்பி கழிவுநீர் தெருக்கள், சாலைகளில் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது எனவே இறைச்சிக் கடைகளை சோளிங்கர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்கு நகராட்சி மூலம் க்யூ ஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி நகர சபை உறுப்பி னர்களுக்கு தெரியப்படு த்தவில்லை.இதை விழாவாக நடத்தி வழங்கி இருந்தால் அதன் பயன் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்கள் பேசினர்.
கூட்டத்தில் வாலாஜா நகரில் ரூ.1 கோடியே 7 லட்சம் செலவில் தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், வாலாஜாவில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்காக ரு.15லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த உணர்வு திறன் பூங்கா அமைப்பது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவே ற்றப்பட்டன.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.