உள்ளூர் செய்திகள்

ஆதி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-03-20 15:33 IST   |   Update On 2023-03-20 15:33:00 IST
  • சிறப்பு தீபாராதனை நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ஆதி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் ஆதி மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு, அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News