உள்ளூர் செய்திகள்

பொன்னியம்மன் திருவிழா

Published On 2023-03-08 09:38 GMT   |   Update On 2023-03-08 09:38 GMT
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
  • அன்னதானம் வழங்கப்பட்டது

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் ஊஞ்சல் பொன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாசி மாத திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு நெய், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்பு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாகச் சென்றது. ஊர்வலத்தின் போது கோலாட்டம், புலி ஆட்டம், சுருள் விளையாட்டுகள் மற்றும் நையாண்டி, பொய்க்கால் குதிரை போன்ற நாட்டுப்புற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பக்தர்களும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்தனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News