உள்ளூர் செய்திகள்

கிணற்றில் குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை

Published On 2023-03-05 14:27 IST   |   Update On 2023-03-05 14:27:00 IST
  • தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்
  • போலீசார் விசாரணை

வாணாபுரம்:

வாணாபுரம் அருகே உள்ள தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி தரணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பிரபு பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 16) வாணாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரியதர்ஷினி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்து பிரியதர்ஷினியின் உடலை மீட்டனர்.

பின்னர் வாணாபுரம் போலீசார் உடலை பிரேத பரிசோத னைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News