உள்ளூர் செய்திகள்

பெயிண்டர் திடீர் சாவு

Published On 2022-08-18 10:17 GMT   |   Update On 2022-08-18 10:17 GMT
  • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு (வயது 42). பெயிண்டர்.

இவருக்கு நேற்று முன்தி னம் நள்ளிரவுதிடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் சிட்டி பாபுவை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிட்டிபாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News