கூட்டணி பேச்சை அன்புமணி நடத்தக் கூடாது- ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை
- பா.ம.க. தலைவர் என்று கூறவோ, கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்தவோ அன்புமணிக்கு உரிமை இல்லை.
- மீறி அன்புமணியுடன் பேச்சு நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.
சென்னை:
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை உறுதிப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனிடையே பா.ம.க.வில் தந்தை- மகனுக்குமான மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்த நிலையில், பா.ம.க.வுடனான கூட்டணிப் பேச்சை அன்புமணியுடன் நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பா.ம.க. சமூகநீதிப் பேரவை பெயரில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
* பா.ம.க. பெயரில் தேர்தல் கூட்டணி, அரசியல் முடிவுகளை ராமதாசே மேற்கொள்ள வேண்டும்.
* பா.ம.க. தலைவர் என்று கூறவோ, கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்தவோ அன்புமணிக்கு உரிமை இல்லை.
* பா.ம.க.வுடனான கூட்டணிப் பேச்சை அன்புமணியுடன் நடத்தக்கூடாது.
* மீறி அன்புமணியுடன் பேச்சு நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.