உள்ளூர் செய்திகள்
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஹூப்ளியில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத் தியபோது, அவர் ரவி (வயது 60) என்பதும் அரக்கோணம் என்று தெரிவித்துவிட்டு சுயநினைவை இழந்தார். பின்னர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.