உள்ளூர் செய்திகள்

முதியவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-03-17 15:28 IST   |   Update On 2023-03-17 15:28:00 IST
  • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனை
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கலர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 75), இவர் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் படுக்க சென்றார்.

நேற்று அதிகாலை குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சுந்தர மூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News