உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி முதியவர் சாவு

Published On 2023-07-08 13:51 IST   |   Update On 2023-07-08 13:51:00 IST
  • சிகிச்சை பலனின்றி இறந்தார்
  • போலீசார் விசாரணை

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் நடராஜர் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 61). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பைக்கில் சென்றார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரவிக்குமார் பலத்த காயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி நேற்று ரவிக்குமார் இறந்தார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News