உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
- அலகு குத்தியும், பறக்கும் காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
- பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் முத்துமாரியம்மன், கவுக்கியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும்; பறக்கும் காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.