உள்ளூர் செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டம் நடந்த காட்சி.

மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டம்

Published On 2022-08-27 16:03 IST   |   Update On 2022-08-27 16:03:00 IST
  • நெமிலியில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்தி றனாளிகளுக்கான இக்கூட்டத்தில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்விற்கு, தமிழக அரசு மேற்கொள்ளும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்சரவணன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்க ன்வாடி பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News