உள்ளூர் செய்திகள்

சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-04-28 07:56 GMT   |   Update On 2023-04-28 07:56 GMT
  • சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபாவிற்கு பூஜைகள் நடத்தது
  • பக்தர்கள் தரிசனம்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் உள்ளது.தற்போது இந்த கோவில் அருகில் புதியதாக சீரடி சாய்பாபாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கலசங்கள் புறப்பாடும், மூலவர் சாய்பாபாவிற்கும் , கோபுர விமானத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபாவிற்கு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News