உள்ளூர் செய்திகள்

வாலிபரை தாக்கிய தந்தை, மகன் கைது

Published On 2023-03-21 15:07 IST   |   Update On 2023-03-21 15:07:00 IST
  • நிலத்தகராறில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

நெமிலி:

நெமிலி அடுத்த சயனபு ரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 57). இவரது மகன் பாண்டியன் (33). இவரது குடும்பத்துக்கும், முனியாண்டியின் தம்பி மகன் ஆகாஷ் (23) என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு பலமுறை அது மோதலில் முடிந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு முனியாண்டிக்கும் அவரது தம்பி மகன் ஆகாஷ்க்கும் நிலம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் முனியாண்டி மற்றும் அவரது மகன் பாண்டியன் இருவரும் சேர்ந்து ஆகாசை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் ஆகாஷ் புகார் அளித்தார். அதன்பேரில் ஆகாசை தாக்கியதாக தந்தை மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News