என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபரை தாக்குதல்"

    • நிலத்தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    நெமிலி அடுத்த சயனபு ரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 57). இவரது மகன் பாண்டியன் (33). இவரது குடும்பத்துக்கும், முனியாண்டியின் தம்பி மகன் ஆகாஷ் (23) என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு பலமுறை அது மோதலில் முடிந்துள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு முனியாண்டிக்கும் அவரது தம்பி மகன் ஆகாஷ்க்கும் நிலம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் முனியாண்டி மற்றும் அவரது மகன் பாண்டியன் இருவரும் சேர்ந்து ஆகாசை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து நெமிலி போலீஸ் நிலையத்தில் ஆகாஷ் புகார் அளித்தார். அதன்பேரில் ஆகாசை தாக்கியதாக தந்தை மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
    • 9 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஒரகளியூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் 30 வயது வாலிபரின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த மன்சூர் என்பவரும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளகாதலாக மாறியது.

    இதனால் அவரது மனைவி அவரை பிரிந்து மன்சூருடன் சென்றார். இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு வாலிபரின் மனைவி மன்சூரை பிரிந்து அவரிடம் சொல்லாமல் கணவரின் வீட்டுக்கு வந்தார்.

    இதனால் மன்சூர் கோபமாக இருந்து வந்தார். சம்பவத்தன்று மன்சூர் கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்றார். அங்கு உள்ளே நுழைந்து கள்ளகாதலியின் கணவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மன்சூர் கள்ளகாதலியின் கணவரை சரமாரியாக தாக்கினார்.

    பலத்த காயம் அடைந்த அவர் வலியால் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அந்த வாலிபரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்த வாலிபர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் தெரிவித்தார்.புகாரின் பேரில் போலீசார் மன்சூர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×