உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

Published On 2023-04-20 08:35 GMT   |   Update On 2023-04-20 08:35 GMT
  • ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
  • கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் நடப்பு ஏப்ரல் மாதத்திற்கான, மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை 21-ந்தேதி காலை 11 மணிக்கு (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடைத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை கலைந்திட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்கள் பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News