உள்ளூர் செய்திகள்
- உடல்நிலை சரியாகாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கல் லாளகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45), விவசாயி. இவருக்கு சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து அவரது மனைவி நதியா கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.