உள்ளூர் செய்திகள்

பைக் மோதி விவசாயி சாவு

Published On 2023-04-10 15:22 IST   |   Update On 2023-04-10 15:22:00 IST
  • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமம், பெரிய தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 54) விவசாயி.

இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து நெமிலி செல்வதற்காக சாலையை கடந்த போது எதிரே வந்த மோட் டார்சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பலி

பின்னர் மேல் சிகிச்சைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News