உள்ளூர் செய்திகள்

தண்டவாளம் அருகே வாலிபர் பிணம்

Published On 2022-12-02 15:47 IST   |   Update On 2022-12-02 15:47:00 IST
  • அடையாளம் தெரியாமல் திணறல்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர்-திருத்தணி ரெயில் நிலையத்திற்கு இடையே திருப்பதி ரெயில் மார்க்கத்தில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணம் கிடப்பதாக அரக்கோ ணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்துக்கு சென்ற உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோ ணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News