உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Published On 2023-07-28 14:31 IST   |   Update On 2023-07-28 14:32:00 IST
  • பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்து விளக்கினர்
  • ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் எஸ்.ஆர் கேட் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, மழை காலங்களில் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து விலகி இருத்தல் வேண்டும். நீர் நிலைகளில் தவறி விழுந்தால் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News