உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Published On 2023-01-21 14:39 IST   |   Update On 2023-01-21 14:39:00 IST
  • போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
  • பஸ் படிக்கட்டுகளில் அபாயகரமான பயணம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரிய கிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவேரிப்பாக்கம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பஸ் படிக்கட்டுகளில் அபாயகரமான பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தலைமைக் காவலர் பாஸ்கர் தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News