search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dangerous journey"

    • திண்டுக்கல்லில் இருந்து ஒத்தக்கடை செல்லும் தனியார் பஸ்ஸில் கொசவபட்டி பள்ளியில் பயிலும் மாணவர்களும் படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.
    • அரசு பஸ்களிலும் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளுக்கு வருகிறார்கள். இதனால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். திண்டுக்கல்லில் இருந்து பண்ணைபட்டிக்கு சென்ற தனியார் பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் பயணம் செய்தனர். படியில் பயணம் நொடியில் மரணம் என்பார்கள்.

    ஆனால் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்தது பார்ப்பவர்களை பதற வைக்கிறது. இதேபோல் சாணார்பட்டி பகுதியிலும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். திண்டுக்கல்லில் இருந்து ஒத்தக்கடை செல்லும் தனியார் பஸ்ஸில் கொசவபட்டி பள்ளியில் பயிலும் மாணவர்களும் படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது. பாரம் தாங்காமல் உடைப்பு ஏற்பட்டு மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

    எனவே டிரைவர், கண்டக்டர்கள் மாணவ- மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டு இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட போலீசார் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.இதேபோல் அரசு பஸ்களிலும் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
    • பஸ் படிக்கட்டுகளில் அபாயகரமான பயணம் செய்வதை தவிர்க்க வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரிய கிராமம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காவேரிப்பாக்கம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பஸ் படிக்கட்டுகளில் அபாயகரமான பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்தும், கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தலைமைக் காவலர் பாஸ்கர் தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ×