நெமிலி அருகே பெண் தீக்குளிக்க முயற்சி
- ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை இடிக்க முயன்றதால் விபரீதம்
- போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றினர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட் டம், நெமிலி அருகே உள்ள பெரப்பேரி கிராமத்தில் அர சுக்கு சொந்தமான பாதை புறம்போக்கு இடத்தை ஆக்கிர மிப்பு செய்து கடந்த 5 ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலை யில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெரப்பேரி கிராமத் தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஆக்கிர மிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசா ரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு களை அகற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரு வாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டில் கோர்ட்டு உத்தரவை ஒட்டினர். இந்த நிலையில் நேற்று நெமிலி தாசில் தார் சுமதி தலைமையில், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், வரு வாய் ஆய்வாளர் கனிமொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா, பாரதி ஆகி யோர் சென்று ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் மாட்டுக்கொட்ட கையை அப்புறப்படுத்த முயன்றனர்.
இதற்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்கு ளிக்க முயற்சி செய்தார்.
அவரை போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வீடு இடித்து அப் புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.