உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாலியல் ெதால்லை

Published On 2023-06-21 13:42 IST   |   Update On 2023-06-21 13:42:00 IST
  • போக்சோவில் மேஸ்திரி கைது
  • ஜெயிலில் அடைத்தனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி. இவர் அதேபகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News