உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

Published On 2022-09-26 15:39 IST   |   Update On 2022-09-26 15:39:00 IST
  • ரோந்து பணியில் சிக்கினர்
  • 1 கிலோ 200 கிராம் போதைபொருள் பறிமுதல்

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த மிட்டபேட்டை கிராமப் பகுதியில் கஞ்சா விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர்.

அப்போது மிட்டபேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் பெருமாள்ராஜ பேட்டை பகுதியை சேர்ந்த மூக்கன் என்கிற ராஜசேகர் (வயது 29), சூர்யா (25) என்பதும் அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News