உள்ளூர் செய்திகள்

போதை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2023-07-29 14:56 IST   |   Update On 2023-07-29 14:56:00 IST
  • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
  • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்

ராணிப்பேட்டை:

வாலாஜா அடுத்த டோல்கேட் அருகே கடந்த 16-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 2 கார்களில் 4 டன் குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வர்ஷிராம் (25) , பிருஷா(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி பரிந்துரையின் பேரில் கலெக்டர் வளர்மதி,

குட்கா கடத்தலில் ஈடுபட்ட வர்ஷிராம், பிருஷா ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News