விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கீழக்கரை
மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கற்பூர வலசை கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து புனித நீர் குடங்களை கோவில் விழா கமிட்டியினர், கிராம முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். அப்போது கருடன் வானில் வட்டமிட, மேளதாளத்துடன், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி பட்டணம் காத்தான் ஊராட்சி தலைவர் எம். சித்ரா மருது, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர், அ.தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.