உள்ளூர் செய்திகள்

கொத்தடிமை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்

Published On 2023-09-08 08:04 GMT   |   Update On 2023-09-08 08:04 GMT
  • கொத்தடிமை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
  • அலுவலர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கான ஒருநாள் பயிற்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகை யில், மாவட்டத்தில் கொத்த டிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம் 1976-ன் படி போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இருந்து வருகிறதா? என்பதை மாவட்ட தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, சமூக நலத்துறை மற்றும் பிற துறைகளும் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர் முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

அதற்கேற்ப அலுவ லர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ராஜா, ஜப பிரின்ஸ், எசக்கியேல், மலர்விழி ஆகியோர் பணியாளர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த பயிற்சி வழங்கினர்.

Tags:    

Similar News