உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவ கல்லூரியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சம்

Published On 2023-11-06 07:48 GMT   |   Update On 2023-11-06 07:48 GMT
  • ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
  • தெருவிளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ராமநாதபுரம் அரசு மருத் துவ கல்லூரி மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் படிக் கின்றனர்.

இவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் கல்லூரிக்கு வரும் சாலை யில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதில்லை. கல்லூரியை ஒட்டி உள்ள பகுதிகள் புதர்கள் நிறைந்த பகுதியாக காட்சி அளிக்கி றது.

இதனால் அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி சாலை யில் 2 பாம்புகள் சென்ற தால் மாணவர்கள் அச்ச மடைந்தனர். சில நாட்க ளுக்கு முன் கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சென்றுள்ளது. மருத்துவ கல்லூரி பகுதியில் பாம்பு கள் படையெடுக்கும் நிலை ள்ளது.

மேலும் விஷ பாம்பு மற்றும் ஜந்துகளால் மாண வர்களுக்கு ஆபத்து உள் ளது. அதிகாலையில் இப் பகுதியில் நடை பயிற்சி செய்வோரும் அச்சமடைந் துள்ளனர். அப்பகுதியில் மாணவர்கள் அச்சமின்றி சென்று வர தெரு விளக்கு கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மருத்துவ கல்லூ ரிக்கு செல்லும் சாலை முழுவதும் விளக்குகள் அமைத்து உயிர் காக்கும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாண வர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News