உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கம்

Published On 2023-01-11 15:05 IST   |   Update On 2023-01-11 15:05:00 IST
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதா வது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இடையூறுமின்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையி லிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங் கண்ணி, மயிலாடு துறை, திருவாரூர், திருத்துறைப் பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர். புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வருகிற 12,13,14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய ஊர்க ளுக்கும் மற்றும் கும்ப கோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் ஜன. 12-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை யும், அனைத்து முக்கிய. நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜன. 12-ந் தேதிமுதல் 14-ந்தேதி வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேரா வூரணி, மன்னார்குடி, நன்னி லம், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய ஊர்க ளுக்கும், கோயம் பேடு டாக்டர் எம். ஜி. ஆர். பஸ் நிலை யத்திலிருந்து கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப் பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடு துறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கும் இயக்கப்பட உள்ளது. மேலும் பொங்கல் முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்லும் வகையில் ஜனவரி 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News